News December 15, 2025
கோவை: ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு

கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவின்படி, கோவை ஊர்க்காவல் படையில் காலியான பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. கோவை மற்றும் சுற்றுப்புற ஆண்கள் 15.12.2025 மாலை 5 மணிக்குள் காந்திபுரம் C1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 45 வயது வரையிலான, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் அல்லது தேர்ச்சி பெறாதோரும் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 31.12.2025 ஆகும்.
Similar News
News December 19, 2025
கோவை: ரூ.60,000 சம்பளத்தில் வங்கியில் வேலை! APPLY NOW

கோவை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 514 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any degree.
3. கடைசி தேதி : 05.01.2026
4. சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். <
6. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025. இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
News December 19, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம், மேட்டுப்பாளையம் சாலை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், ரங்கநாதபுரம், சூலூர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, அன்னூர், சொக்கம்பாளையம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 19, 2025
ஸ்தம்பிக்கும் கோவை! இங்கு செல்ல தடை

கோவை ஒப்பணக்கார வீதி நகைக்கடை, ஜவுளிக்கடை, எலக்ட்ரானிக்ஸ் என வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஒப்பணக்கார வீதியில் கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.


