News October 14, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (14.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
கோவைப்புதூர்: பாலியல்தொழில் 4 பேர் கைது!

கோவை, கோவைப்புதூர் காமாட்சி நகரில் உள்ள வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. பின் குனியமுத்தூர் போலீசார் நேற்று அங்கு சென்று வீட்டில் நடத்திய சோதனையில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. பின் புரோக்கர்கள் முருகன் (29), சங்கீதா (30), மல்லிகா (25) மற்றும் சுகன்யா (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஸ்ரீ என்பவரை தேடி வருகின்றனர்.
News October 14, 2025
கோவையில் வெளுக்கப்போகும் மழை!

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News October 14, 2025
கோவை: பட்டாவில் மாற்றமா? ஒரு கிளிக் போதும்

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க, பட்டா/சிட்டா விவரங்களை தெரிந்துகொள்ள மிகவும் எளிமையாக்க எங்கும் செல்லவேண்டாம். தமிழ்நாடு அரசு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் அமர்ந்த இடத்திலேயே <