News August 21, 2024
கோவை இன்றைய தலைப்பு செய்திகள்

➤விரைவில் பன்றிகளை சுட அரசாணை – மாவட்ட வன அலுவலர்.
➤Digital Skyல் பதிவுசெய்யாமல் ட்ரோன் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை- கோவை காவல் ஆணையர்
➤கோவை டிக்கெட் கவுன்டர்களில் ‘க்யூ ஆர் கோடு’ ஸ்கேன் செய்து பணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
➤ஆழியாறில் திடீர் சூறாவளி – போக்குவரத்து பாதிப்பு
➤ஆழியார் அருகே தனியார் தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
Similar News
News December 8, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (08.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் பூஞ்சோலை ஜீவா நகரை சேர்ந்தவர் முருகன்(57). இவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 5 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, கோவை ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். இதுகுறித்து சிறை வார்டன் சரவணகுமார் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 8, 2025
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

கோவை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த ஏர் அரேபியா விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உடமைகளுடன் வந்த பயணி ஒருவர் கண்ணாடியை உடைத்து, தப்பிச் செல்ல முயற்சி செய்தார். அவ்வாறு தப்பிச்செல்ல முயன்ற வரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது உடைமைகளை CISF உதவியுடன் சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.


