News October 25, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (25.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 26, 2025
வேளாண்மை பல்கலை.,யில் மண்புழு உரத் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 26 நாள் இலவச திறன் சார்ந்த மண்புழு உரத் தயாரிப்பு பயிற்சி 30.10.2025 முதல் 28.11.2025 வரை நடைபெற உள்ளது. இதில் 18–35 வயதுடைய பட்டதாரிகள், டிப்ளமோ, விவசாயிகள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு 9443209452 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.
News October 25, 2025
BREAKING: கோவையில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

கோவை, தெலுங்குபாளையம் கார் வாட்டர் வாஷ் நிறுவன ஊழியர்கள் ஹரிஷ், பிரகாஷ் ஆகியோர் நண்பர்களான அகத்தியன், சபா, பிரபாகரன் ஆகியோருடன் நேற்றிரவு காரில் சிறுவாணி சாலையில் பச்சாபாளையம் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின்மீது மோதியதில் இளைஞர்கள் 4 பேர் பலியாகினர். மேலும், சிகிச்சையில் இருந்த பிரபாகரன் என்பவரும் இன்று மாலை உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
News October 25, 2025
கோவை மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

கோவை: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!


