News October 26, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (அக்.26) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Similar News
News February 21, 2026
கோவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 21, 2026
கோவைக்கு அறிவித்தது மத்திய அரசு!

கோவை விமான நிலையத்தில் ‘புதிய உடான் யாத்ரி கபே’ உணவகத்தைத் திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விமான நிலைய விரிவாக்கத்திற்கு ₹2,136 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஆகியோர் உடனிருந்த இந்நிகழ்வில், விரிவாக்கப் பணிகள் 2028-ல் நிறைவடைந்து, கோவை விமான நிலையம் உலகத்தரம் வாய்ந்ததாக மாறும் என உறுதிபடத் தெரிவித்தார்.
News February 21, 2026
கோவையில் வசமாக சிக்கிய பெண்!

கோவை மாவட்டம் இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் செல்வராணி, இவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த தெய்வநிதி என்ற பெண் செல்வராணியின் முகத்தில், பூச்சி மருந்தை தெளித்து முக்கால் பவுன் நகையை பறித்து சென்றார். இது குறித்து வழக்கு பதிவு செய்த இரத்திபுரி காவல்துறையினர் தெய்வநிதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


