News September 15, 2025

கோவை அருகே பரிதாபமாக பலி!

image

கோவை: கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மார்ட்டின் பிரபு (34). இவர் ஏசி மெக்கானிக்காக வேலை வருகிறார். இந்த நிலையில் நேற்று முந்தினம் கவுண்டம்பாளையம் பகுதியில் ஏசி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து கவுண்டம்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 15, 2025

கோவை: ரயில்வே துறையில் வேலை!

image

கோவை மக்களே இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசைய ? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க<<>>. நவ.14ஆம் தேதி கடைசி நாளகும். அருமையான வேலை வாய்ப்பு இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 15, 2025

விடைபெற்றது கோவை போலீஸின் ‘சாரா’

image

கோவை காவல்துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய மோப்பநாய் சாரா உயிரிழந்தது. 2016ல் லாப்ரடோர் ரெட்ரீவர் இனத்தை சேர்ந்த சாரா பணியில் இணைந்து, டிராக்கர் பணியில் 103க்கும் மேற்பட்ட அழைப்புகளின் அடிப்படையில் சேவையாற்றியது. 2024ல் ஓய்வு பெற்ற பின்னர், சிறுநீரக குறைபாட்டால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தது. போலீசார் மரியாதை செலுத்தி, போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

News September 15, 2025

கோவை அருகே ஆண் குழந்தை நரபலியா?

image

கோவை:இருகூர் – ராவத்துார் ரயில் தண்டவாளம் அருகே, நேற்று ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் மற்றும் அந்த இடத்தில் மிளகாய் பொடி,கோழி ரத்தம் உள்ளிட்டவை சிதறி கிடந்தது. தகவல் அறிந்த சிங்காநல்லுார் போலீசார் குழந்தை உடலை கைப்பற்றினர். போலீசார் கூறுகையில், ‘குழந்தையை கொலை செய்து, அதை மறைக்க, கோழி ரத்தம், மிளகாய் பொடி உள்ளிட்டவற்றை துாவியிருக்கலாம்.நரபலியாகவும் இருக்கலாம் என விசாரணை நடக்கிறது’ என்றனர்.

error: Content is protected !!