News December 11, 2025

கோவை அருகே சோகம்: இளம்பெண் தற்கொலை!

image

சிறுமுகை பெரியூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(27) மீன்பிடி தொழிலாளி. இவருக்கு புவனேஸ்வரி(25) என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர். கோவிந்தராஜ் மாலை அணிந்துள்ளதால் பாட்டி வீட்டில் நேற்றிரவு உறங்கியுள்ளார். நேற்று காலை வந்தபோது, புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரித்து வருவதோடு, திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகாததால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Similar News

News December 22, 2025

கோவை: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

image

கோவை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 22, 2025

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, (டிச.23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, லாலி லோடு, டிபி ரோடு ஒரு பகுதி, சுக்ரவார்பேட்டை ஒரு பகுதி, இபி காலனி, சொக்கம்புதூர், ராஜவீதி, பெரிய கடை வீதி, சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், கட்டம்பட்டி, ஜே.கிருஷ்ணபுரம், நெகமம் வடசித்தூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 22, 2025

JUSTIN: கோவை பெண் கொலை வழக்கில் அதிரடி கைது!

image

கோவை ரத்தினபுரி ஜிபிஎம் நகரை சேர்ந்த ராஜாராம் சின்ன மேட்டுப்பாளையத்தில் நகை அடகு கடை நடத்தி வந்தார். இவரிடம் கிருஷ்ணகிரி ஊத்தங்கரையை சேர்ந்த சுதா(39) என்பவர் போலி அடகு நகைகளை வைத்து பணம் பெற்ற வழக்கில், ராஜாராம், அவரது நண்பர்கள் சேர்ந்து சுதாவை அடித்து கொலை செய்துள்ளனர். இவ்வழக்கில் சரவணம்பட்டி போலீசார் ராஜாராம், மகேந்திரன் ஆகியோரை ஏற்கனவே கைது செய்த நிலையில், ஊழியர் யஸ்வந்தை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!