News September 11, 2025

கோவையில் 8 மாதங்களில் 79 பேர் உயிரிழப்பு!

image

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 83 பேர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்து இருக்கிறார்கள். அதில் 2 பேர் மட்டுமே தற்கொலை செய்துள்ளனர். இந்த ஆண்டில் 8 மாதத்தில் மட்டும் 79 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பை தடுக்க ரயில்வே வாரியம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தண்டவாளத்தை ஒட்டி தடுப்பு வேலி அமைத்தால் மட்டுமே இது போன்ற உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியும். இதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது

Similar News

News September 11, 2025

கோவை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

வடகோவை ரயில் நிலையத்தில் தண்டவாளம் மாற்றும் பணி நடைபெறுவதால், போத்தனூர் – மேட்டுப்பாளையம் (66616-67) மெமு ரயில்கள் நாளை (செப்.12) ரத்து செய்யப்படுகிறன. திருச்சி பாலக்காடு டவுன் (16843) ரயில் நாளை, போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் சிங்காநல்லூர், பீளமேடு, வடகோவை ரயில் நிலையங்கள் வழியாக செல்லாது. இதற்கு ஏற்றார்போல் பொதுமக்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News September 11, 2025

கோவை: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

image

கோவை மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே கிளிக் செய்து Mparivaahan <<>>செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 11, 2025

கோவையில் சிக்கிய அரசு அதிகாரி!

image

கோவை, கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர், தனது நிலத்தை வரைமுறைப்படுத்துவதற்காக ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்றபோது, ஊராட்சி செயலர் முத்துசாமி ரூ.10,000 லஞ்சமாகக் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தங்கராஜ், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு முத்துசாமியை கைது செய்தனர். மக்களே உங்களிடன் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் 0422-2449550 அழைத்து புகார் அளியுங்கள்.SHAREit

error: Content is protected !!