News November 17, 2024
கோவையில் 8ஆவது உயர் கல்வி மாநாடு

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவையில் நேரு ஸ்டேடியம் வளாக செஞ்சுரி புக் ஹவுஸில் புத்தகக் கண்காட்சி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.உயர் கல்வி மாநாடு இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 8ஆவது உயர் கல்வி மாநாடு கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது.சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் யாதுமாகி நின்றாள் சிறப்புரை சூலூர் எம்.கே.புதூர் விவேகானந்தர் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறகிறது.
Similar News
News March 10, 2026
கோவை: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

கோவை மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.
News March 10, 2026
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: கோவை ஆட்சியர் வாழ்த்து

தமிழகத்தில் நாளை (மார்ச் 11) 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது. கோவையில் 509 பள்ளிகளைச் சேர்ந்த 18,861 மாணவர்கள், 19,529 மாணவிகள் என மொத்தம் 38,390 பேர் மற்றும் 1,237 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதியை, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஏற்பாடு செய்துள்ளார். மேலும் அவர் மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
கோவை: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!


