News October 20, 2024
கோவையில் 60 பள்ளி கட்டிடங்களை இடிக்க முடிவு

பருவமழை தீவிரமடைந்துள்ளதை ஒட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் இடியும் நிலையில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை கண்டறிந்து அதனை உடனடியாக இடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவை, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள 60 கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
BREAKING: கோவை வெடிகுண்டு வழக்கில் முக்கிய நபர் கைது

1998-ல் கோவையில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சத்தீஸ்கரில் தலைமறைவாக இருந்த சாதிக் ராஜா என்பவரை போலீசார் தற்போது கைது செய்தனர். வெடிகுண்டு வழக்கு தொடர்பாக முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதால், காவலர்கள் உஷார் நிலையில் இருக்க கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News July 10, 2025
ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். (<<17014173>>மேலும் தகவலுக்கு<<>>)
News July 10, 2025
ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு (2/2)

▶️ ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி
▶️ விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை)
▶️ விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000.
▶️ விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமச்சடங்கு செய்ய ரூ.5000 வரை.