News February 27, 2026
கோவையில் +2 பொதுத்தேர்வை 36 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு வரும் மார்.2 ஆம் தேதி துவங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 130 மையங்களில் 365 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 19,344 மாணவர்கள், 16,368 மாணவிகள் என மொத்தமாக 35,712 மாணவர்கள், 852 தனித்தேர்வர்கள் என மொத்தமாக 36,564 பேர் எழுத உள்ளதாக கல்வி துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 28, 2026
கோவை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கோவை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News February 28, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.27) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 27, 2026
JUST IN: கோவையை உலுக்கிய சம்பவம்.. முக்கிய UPDATE!

கோவை விமான நிலையத்தின் பின்புறம் கடந்தாண்டு நவம்பர் மாதம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், வரும் மார்ச் 7-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது, மாவட்ட மகளிர் நீதிமன்றம். இவ்வழக்கில் சதீஷ், கார்த்தி, தவசி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், அவருடன் இருந்த நண்பர் மற்றும் 112 சாட்சிகளில் 78 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


