News October 4, 2024

கோவையில் விடுமுறை அளிக்காததால் அபராதம்

image

கோவை மாவட்டத்துக்குட்பட்ட கடைகள் மற்றம் தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அக்.2ல் காந்தி ஜெயந்தி விடுமுறை அன்று விடுமுறை அளிக்காமல் செயல்பட்ட 164 நிறுவனங்களின் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கேற்ப, அதிகபட்சம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என, தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News April 30, 2025

தொழிலாளியின் கன்னத்தை கடித்து துப்பிய போதை ஆசாமி

image

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த இம்ரான்(38), லாலி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றபோது, அங்கு வந்த ராஜனுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜன், இம்ரானின் கன்னத்தை கடித்து துப்பினார். காயமடைந்த இம்ரான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 29, 2025

கோவை: பள்ளத்தில் கவிழ்ந்த கார்

image

கோவை சூலூரை சேர்ந்த ஸ்ரீநிவேதா, தனது தாயார் வாணியுடன் காரில் செஞ்சேரி மலை முருகன் கோயிலுக்கு சென்றிருக்கிறார். பார்க்கிங்கில் காரை நிறுத்த முயன்ற போது, பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால், 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக ஏர்பேக் ஓபன் ஆனதால், இருவரும் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 29, 2025

கோவை: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்!

image

▶️ காந்திபுரம் – 9498101143. ▶️ ஆர்.எஸ்.புரம் – 0422-2475777. ▶️ மதுக்கரை – 9498101184. ▶️ பேரூர் – 0422-2607924. ▶️ தொண்டாமுத்தூர் – 0422-2617258. ▶️ பெ.நா.பாளையம் – 9498101189. ▶️ மேட்டுப்பாளையம் – 9498101186. ▶️ அன்னூர் – 9498101173. ▶️ கருமத்தம்பட்டி – 9498101178. ▶️ சூலூர் – 7845175782. ▶️ பொள்ளாச்சி டவுன் – 04259-224433. ▶️ ஆனைமலை – 04253-282230. ▶️ வால்பாறை – 9487374392. இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!