News October 16, 2025

கோவையில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

விருதுநகரை சேர்ந்த சித்ரவேல், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் விளம்பரப்படுத்தினார். இதனை நம்பி நிறுவனத்தில் பலர் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். முதலீடு செய்தவர்களுக்கு பணம் வரவில்லை. விசாரித்ததில் போலி நிறுவனம் என தெரிந்தது. பாதிக்கப்பட்டோர் டெல்லி சிபிஐயில் அளித்த புகாரின் வழக்கு பதிந்து, சித்ரவேலை தேடிய நிலையில், நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வைத்து கைது செய்தனர்.

Similar News

News October 16, 2025

கோவையில் பரபரப்பு: குப்பை தொட்டியில் குழந்தை சடலம்!

image

கோவை அம்மன் குளம் சாலையில் உள்ள பொதுக்கழிப்பறை அருகே, குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனை நேற்று மாலை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்ய வந்தபோது, பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து, ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி, ஜிஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரிக்கின்றனர்.

News October 16, 2025

கோவை அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் உள்ள ஏ.கே.எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது அசாருதீன்(22). இரும்புக்கடை ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு தனது டூவீலரில் ஊட்டி சாலை வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, முன்னால் சென்ற பிக்கப் வாகனத்தை முந்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News October 16, 2025

கோவை மக்களே: இலவச கார் ஓட்டுநர் பயிற்சி

image

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி இன்று முதல் வழங்கப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களு கற்றுத்தரப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!