News November 18, 2025
கோவையில் வசமாக சிக்கிய இளம்பெண்!

கோவையில் தடாகம் சாலையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தடாகத்தை சேர்ந்த மரியாமோல் என்கிற கலைசசெல்வி பணிபுரிந்து வந்தார்.இவரை சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர்.இந்நிலையில் வாடிக்கையாளரிடம் ரூ.2 லட்சம் பணம் பெற்றதாகவும், லேப்டாப், ஸ்கூட்டர், செல்போனை தராமல் ஏமாற்றி வந்த்தாகவும் புகார் வந்துள்ளது. விசாரணை மேற்கொண்ட சாய்பாபா காலனி போலீசார் கலைச்செல்வியை நேற்று கைது செய்தனர்
Similar News
News November 18, 2025
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்!

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து பிறப்பு மற்றும் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (நவ.18) கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. பெற்றோர் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தி உள்ளார்.
News November 18, 2025
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்!

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து பிறப்பு மற்றும் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (நவ.18) கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. பெற்றோர் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தி உள்ளார்.
News November 18, 2025
தொண்டாமுத்தூர்: திமுக நிர்வாகிகள் 9 பேர் விடுதலை!

தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றி கருணாநிதியின் புகைப்படம் வைத்ததால் ஏற்பட்ட சர்ச்சையில், அதிமுக நிர்வாகிகளின் வாகனங்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகிகள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட கூடுதல் 4-ஆம் நீதிமன்றம், திமுக நிர்வாகிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.


