News September 27, 2025
கோவையில் ரேபிஸ் பரவலா? உண்மை என்ன!

கோவை மாவட்டத்தில் 25 தெருநாய்களுக்கு ‘ரேபிஸ்’ (Rabies) நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பரவி வந்தது. இது குறித்து கோவை மாநகராட்சியைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி முழுவதுமாகப் போலியானது ஆகும்.நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தனர்.SHAREit
Similar News
News September 27, 2025
கோவையில் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

கோவை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News September 27, 2025
அக்.5 கோவை வருகிறார் துணை ஜனாதிபதி!

கோவை: தொண்டாமுத்தூர் பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா கோவையில் அக்.5 நடைபெறுகிறது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்கான ஆலோசனை கூட்டம் பேரூர் ஆதின மடத்தில் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினரை வரவேற்பது,உணவு வழங்குவது போன்ற நிகழ்வுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது
News September 27, 2025
கோவையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (20). இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.