News April 24, 2025
கோவையில் ரயில் சேவைகள் மாற்றம்

கோவை ரயில்வே துறை அதிகாரிகள் இன்று வெளியிட்ட அறிக்கையில், இருகூர் ரயில்வே யார்டில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 26, 28 ஆகிய தேதிகளில், ரயில் சேவையில் மாற்றம், அதில் திருச்சிராப்பள்ளி சந்திப்பு – பாலக்காடு ரயில் மதியம் 13.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சூலூர் சாலையில் நிறுத்தப்படும் என்றனர்.
Similar News
News October 24, 2025
காந்திபுரத்தில் மாணவி பலி: டிரைவர் சஸ்பெண்ட்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிணி(19) கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்தார். இந்த நிலையில் மாணவி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்வதற்காக காந்திபுரம் வந்துள்ளார். அப்போது, தாறுமாறாக அரசு பேருந்து மோதியதில் இளம் பெண் பலியானார். இச்சம்பவத்தில் தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சுங்கம் கிளை-2 ஐ சேர்ந்த டிரைவர் மார்ட்டின் சஸ்பெண்ட் நேற்று செய்யப்பட்டுள்ளார்.
News October 24, 2025
கோவை: BE, DIPLOMA போதும்.. ரூ.59,000 வரை சம்பளம்

மத்திய அரசு நிறுவனமான திட்டங்கள் (ம) மேம்பாட்டு இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு டிப்ளமோ, டிகிரி(பி.இ) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் மாதம் ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு <
News October 24, 2025
கோவையில் வார்டு அளவிலான சிறப்புக் கூட்டங்கள் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய சிறப்புக் கூட்டங்கள் வரும் 27, 28, 29 அக்டோபர் தேதிகளில் நடைபெறும் என ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இன்று தெரிவித்துள்ளார். இதில் குடிநீர், சாலைகள், தூய்மை, பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்து மூன்று முக்கிய கோரிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளன.


