News October 10, 2024
கோவையில் மாயமான 3 சிறுமிகள் மீட்பு

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் காணாமல் போன 3 மாணவிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று பள்ளியில் இருந்து மாயமான மூன்று மாணவிகள், சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவிகளை மீட்க தனிப்படையினர் சென்னை செல்ல உள்ளனர்.
Similar News
News December 15, 2025
கோவை மத்திய சிறை கைதி உயிரிழப்பு!

கோவை திருச்சி ரோடு பழைய சுங்கம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(39). தொழிலாளியான இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவமனையில் பார்த்த போது எச்ஐவி பாதிப்பு இருந்தது தெரிந்தது. தொடர்ந்து கோவை ஜி எச்சில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 15, 2025
கோவையில் இப்பகுதியில் மின்தடை

கோவையில் இன்று (டிச.15) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பட்டணம் புதூர், கம்பன் நகர், நொயல் நகர், சத்தியநாராயணபுரம், பள்ளபாளையம் EB அலுவலகம், கரவலி சாலை, நாகமாநாயக்கன் பாளையம், காவேரி நகர், காமாட்சிபுரம், பாப்பம்பட்டி ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது.
News December 15, 2025
கோவையில் இப்பகுதியில் மின்தடை

கோவையில் இன்று (டிச.15) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பட்டணம் புதூர், கம்பன் நகர், நொயல் நகர், சத்தியநாராயணபுரம், பள்ளபாளையம் EB அலுவலகம், கரவலி சாலை, நாகமாநாயக்கன் பாளையம், காவேரி நகர், காமாட்சிபுரம், பாப்பம்பட்டி ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது.


