News January 6, 2026

கோவையில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் விபரீத முடிவு!

image

கோவை செல்வபுரம் என்.எஸ்.கே வீதியை சேர்ந்தவர் தனுஷ். நகை பட்டறை தொழிலாளி. மது அருந்தும் பழக்கமுடைய தனுஷ் தினமும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று முன்தினமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மனமுடைந்த தனுஷ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 25, 2026

கோவை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

கோவை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0422-2220351 தெரிவியுங்க. (SHARE பண்ணுங்க)

News January 25, 2026

கோவை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

கோவை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)

News January 25, 2026

பாப்பநாயக்கன்பாளையம் அருகே விபத்து: 2 பேர் பலி

image

இடையர்பாளையத்தைச் சேர்ந்த ரோஹித் (18). இவர் தனது நண்பர் சுதர்சனுடன் (22) காரில் நேற்று சென்று கொண்டு இருந்தார். அப்போது பாப்பநாயக்கன்பாளையம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!