News December 16, 2025
கோவையில் மதுவிற்பனை செய்த இரண்டு பேர் கைது!

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் என்று வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுவிற்பனை ஈடுபட்ட மனோகரன் (52) மற்றும் தமிழ்செல்வம் (35) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 53 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 19, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம், மேட்டுப்பாளையம் சாலை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், ரங்கநாதபுரம், சூலூர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, அன்னூர், சொக்கம்பாளையம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 19, 2025
ஸ்தம்பிக்கும் கோவை! இங்கு செல்ல தடை

கோவை ஒப்பணக்கார வீதி நகைக்கடை, ஜவுளிக்கடை, எலக்ட்ரானிக்ஸ் என வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஒப்பணக்கார வீதியில் கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
News December 19, 2025
கொடிசியா மைதானத்தில் கடற்கரை எக்ஸ்போ

கோவையில் கொடிசியா மைதானத்தில் குளிரூட்டப்பட்ட அற்புதப் பொழுதுபோக்கு நிகழ்வு (கடற்கரை எக்ஸ்போ) தொடங்குகிறது. இந்நிகழ்வை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று துவக்கி வைக்கவுள்ளார். குடும்பத்தோடு பொழுதைப் போக்க சிறந்த இடமாக அமைந்துள்ள இந்நிகழ்வில், 250 அடி நீளக் கடற்கரை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.


