News February 22, 2026
கோவையில் பெண் கொன்று எரிப்பு! இளைஞர் கைது

இரு தினங்களுக்கு முன் துடியலூர் வட்டமலைபாளையம் அருகே இளம்பெண் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். துடியலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் இறந்து கிடந்தவர் செங்காளிபாளையத்தை சேர்ந்த அனிதா என்பதும், ஏற்கனவே திருமணமான நிலையில் தமிழ்ச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு வாக்குவாதத்தில் அவரை அடித்து கொலை செய்து எரித்ததும் தெரிந்தது. எலும்பு முறிந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
Similar News
News March 8, 2026
கோவை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 8, 2026
சட்டமன்ற தேர்தலில் கோவையில் களமிறங்கும் செந்தில்பாலாஜி?

கோவை மண்டல திமுக பொறுப்பாளராகச் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட பின், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக அபார வெற்றி பெற்றது. இதனால் வரும் தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டுமெனப் பல நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர் கோவை அல்லது கரூர் என எந்த தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் சூடுபிடித்துள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே?
News March 8, 2026
கோவையில் ஒரே நாளில் 28 எஸ்.ஐ-க்கள் அதிரடி இடமாற்றம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன் பேரில் கோவை மாநகரில் ஒரே நாளில் 28 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையினை சிட்டி போலீஸ் கமிஷனர் கண்ணன் நேற்று வெளியிட்டுள்ளார்.


