News October 15, 2025
கோவையில் பாலியல்தொழில் 4 பேர் கைது!

கோவை: கோவைப்புதூர் காமாட்சி நகரில் உள்ள வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. பின் குனியமுத்தூர் போலீசார் நேற்று அங்கு சென்று வீட்டில் நடத்திய சோதனையில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. பின் புரோக்கர்கள் முருகன் (29), சங்கீதா (30), மல்லிகா (25) மற்றும் சுகன்யா (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஸ்ரீ என்பவரை தேடி வருகின்றனர்.
Similar News
News October 15, 2025
கோவை: நாளை கடைசி! மிஸ் பண்ணிடாதீங்க….

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 8,000 முதல் 9,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News October 15, 2025
கோவை இளநீர் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு!

கோவை வடவள்ளி தான்சா நகரை சேர்ந்த இளநீர் வியாபாரி வைகுந்தம் கூத்தாண்டவர் கோவில் அருகே கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது, கடை முன்பு ஒருவர் படுத்திருந்துள்ளார். அவரை எழுப்ப முயன்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு இளநீர் வெட்டும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார். இப்புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் சுப்ரமணியம் என்பவரை நேற்று கைது செய்தனர்.
News October 15, 2025
கோவை: கனரா வங்கியில் வேலை வேண்டுமா..?

கோவை மக்களே கனரா வங்கியில் வேலை வேண்டுமா? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <