News October 21, 2025

கோவையில் பட்டாசு வெடிப்பு – 36 பேர் மீது வழக்குப்பதிவு!

image

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த நேரத்தை தாண்டி பட்டாசுகளை வெடித்தாக கோவையில் 36 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 13, 2026

கோவையில் போலீஸ் குவிப்பு!

image

கோவையில் 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். இத்துயரச் சம்பவத்தின் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை (பிப்.14) நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (பிப்.13) முதல் கோவை மாநகரம் முழுவதும் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News February 13, 2026

கோயம்புத்தூரில் 2 நாள்கள் தடை

image

கோவையில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து சிங்காநல்லூர், சின்னியம்பாளையம், நேருநகர், பீளமேடு, லட்சுமி மில்ஸ், இராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், சாய்பாபா காலனி, வடவள்ளி (ம) அதன் சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிகமாக REDZONE ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று (பிப்.13) 9 மணி முதல் (பிப்.15) 9 மணி வரை ஆளில்லா விமானம் (ம) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News February 13, 2026

நுரையீரல் நோய் காரணமாக தற்கொலை

image

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (65). இவர் கடந்த சில மாதங்களாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!