News January 9, 2026
கோவையில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: காரணம் என்ன?

கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வரதலட்சுமி (23). இவருக்கு 18 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று உடல் நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் சோதனை செய்த போது குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். பால் குடிக்கும்போது புரை ஏறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
கோவை: அடுத்தடுத்து மயக்கம்.. 10 நாள்கள் கல்லூரி விடுமுறை

கோவை, துடியலூர் பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரி விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 33 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த உணவு பாதுகாப்பு துறையினர் விடுதியில் இருந்த உணவு (ம) குடிநீர் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த செவிலியர் கல்லூரிக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News January 28, 2026
கோவை ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம்

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு 33-க்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட விளையாட்டு வளாகம் அமையவுள்ளது. 1.10 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் விளையாட்டு வளாகத்தின் மாதிரித் தோற்றம் வெளியாகியுள்ளது. இது வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் ஜொலிக்கப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 28, 2026
கோவை ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம்

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு 33-க்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட விளையாட்டு வளாகம் அமையவுள்ளது. 1.10 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் விளையாட்டு வளாகத்தின் மாதிரித் தோற்றம் வெளியாகியுள்ளது. இது வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் ஜொலிக்கப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


