News August 28, 2025
கோவையில் பக்தர்களை கவர்ந்த பரோட்டா விநாயகர்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் 4 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், ரூ.10 லட்சம் சலவை நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் என விநாயக பெருமான் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறார். அந்த வகையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பரோட்டாவில் விநாயகர் உருவம் செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.
Similar News
News August 28, 2025
கோவைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை வானிலை மையம்

கோவை மாவட்டத்திற்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில் குறிப்பாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 28, 2025
கோவை: B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

கோவை மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 – 1,20,000 முதல் வழங்கப்படும்.இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.2025க்குள் விண்ணபிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு இன்ஜினியர் மாணவர்களுக்கு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 28, 2025
ஓணம் பண்டிகைக்காக சென்னை-கண்ணூா் சிறப்பு ரயில்!

சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை (ஆக.28) இரவு புறப்படும் சென்னை – கண்ணூா் ஒருவழி சிறப்பு விரைவு ரயில் மறுநாள் பிற்பகல் கண்ணூா் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் திருவள்ளூர் காட்பாடி திருப்பூர் போத்தனூர் பாலக்காடு வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.