News September 10, 2025
கோவையில் நூதன மோசடி: போலீசார் எச்சரிக்கை!

கோவையில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை உள்ள 7 மாதங்களில் மட்டும் சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் ரூ.1,010 கோடியை இழந்தனர். சைபர் கிரைம் மோசடி தொடர்பாக 7 மாதத்தில் 88,479 புகார்கள் பெறப்பட்டுள்ளன. சைபர் கிரைம் மோசடியில் இழந்த பணத்தில் ரூ.314 கோடியை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். டிஜிட்டல் கைது மூலமாக பொதுமக்கள் ரூ.97 கோடியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. சைபர் குற்றங்களுக்கு புகார் அளிக்க 1930.
Similar News
News September 10, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (10.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
கோவையில் இலக்கை அடைய இலவச பயிற்சி!

கோவை இளைஞர்களே தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 600 காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் தேர்வுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கான எழுத்து தேர்வு நவம்பர் 09ம் தேதி நடைபெறும். இந்தநிலையில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்!SHARE
News September 10, 2025
கோவை: கேஸ் சிலிண்டருக்கு அதிக பணமா? CALL

கோவை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க