News August 30, 2025

கோவையில் நாளை திடீர் மாற்றம்!

image

கோவையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 284 விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ▶️டவுன்ஹால்-உக்கடம்:சிவாலயா சந்திப்பு வழியாகச் செல்வபுரம் செல்லலாம் ▶️மேட்டுப்பாளையம் சாலை: உக்கடம் வழியாக காந்திபுரம் செல்ல வேண்டும் ▶️பேரூர்: செல்வபுரம் பள்ளி அருகில் திரும்பி,உக்கடம் செல்லலாம் ▶️தடாகம் சாலை: லாலி ரோடு வழியாகத் தடாகம் சாலைக்குச் செல்லலாம்.SHAREit

Similar News

News September 7, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (07.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 7, 2025

கோவை: DRIVING தெரிந்திருந்தால் அரசு பணி!

image

கோவை மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE IT

News September 7, 2025

அட்வான்ஸ் புக்கிங்: 20 சவக்குழிகள் தோண்டப்பட்ட சம்பவம்!

image

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்குச் சொந்தமான அடக்கவிடத்தில், ஒரே நாளில் 20 குழிகள் தோண்டப்பட்டதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், “செடி, கொடிகளை அகற்ற ஜேசிபி வாகனம் வந்தது. அவர்கள் விரைவாக வேலையை முடித்ததால், வாடகை வீணாக போகிறதே என்று குழிகளை தோண்டினோம்,” என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழிகள் மூடப்பட்டது.

error: Content is protected !!