News October 31, 2025
கோவையில் கொடுமை: தாய் மகள்களுக்கு அரிவாள் வெட்டு

கோவை துடியலூர் சாஸ்திரி விதியை சேர்ந்த செல்வி என்பவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர்.கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து கார்த்திக் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் மது போதையில் நேற்று வீட்டில் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் செல்வி மற்றும் மகள்களை வெட்டியுள்ளார். துடியலூர் போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்
Similar News
News October 31, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.01) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வெரைட்டி ஹால் ரோடு, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ஒரு பகுதி, உக்கடம் ஒரு பகுதி, சுங்கம் பைப்பாஸ், ஸ்டேட் பேங்க் ரோடு, ஆட்சியர் அலுவலகம், கோவை ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News October 31, 2025
கோவை வழியாக சிறப்பு இன்று முதல் ரயில் இயக்கம்!

பண்டிகை கால நெரிசலை சமாளிக்க பிகாரின் பரவுனியில் இருந்து எர்ணாகுளம் நோக்கி (05271) ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது அக்டோபர் 31 இரவு 8.30க்கு புறப்பட்டு நவம்பர் 3 காலை 6.00க்கு எர்ணாகுளம் சேரும். ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக செல்லும் இந்த ரயிலில் ஏசி, ஸ்லீப்பர், சாதாரண வகுப்புகள் அமைந்துள்ளன.
News October 31, 2025
கோவையில் நவம்பர் 1, 2 தேதிகளில் “நம்ம ஊரு திருவிழா”

கோவையில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் வ.உசி மைதானத்தில் நவம்பர் 1, 2 தேதிகளில் கோயம்புத்தூர் சங்கமம்–நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது. 400 கலைஞர்கள் பங்கேற்கும் இவ்விழாவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்குவார். நாட்டுப்புற, இசை, நடன நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இதில் மக்களை திரளாக கலந்து கொண்டு பாரம்பரியக் கலைஞர்களுக்கு உற்சாகம் அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.


