News September 26, 2025
கோவையில் காட்டு யானை தாக்கி பலி!

கோவை மருதமலை அடுத்துள்ள சின்னமலை பகுதியில் ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் பணிபுரிந்து வந்த மருதாச்சலம் என்ற செந்தில் (42) நேற்றிரவு தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு புதரில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை அவரை தாக்கியது.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை ஜிஎச் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்
Similar News
News September 26, 2025
கோவை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது<
News September 26, 2025
7 ஆயிரம் சந்தேக நபர்களின் கைரேகைகள் பதிவு!

கோவை மாநகரில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ஏ, ஏ+ ரவுடிகளை கட்டுப்படுத்த மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க சென்னை மாநகர போலீஸ் சட்டத்தின் படி மாநகரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 7000 சந்தேக நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
News September 26, 2025
கோவையில் விபத்து பெண் போலீஸ் உயிரிழப்பு!

கோவை சிங்காநல்லூர் அடுத்த காமராஜர் ரோட்டில் உள்ள சரவணா பார்க்கிங் அருகே இன்று காலை 4.45 மணிக்கு அரிசி மூட்டை ஏற்றி வந்த ஒரு ஈச்சர் வாகனம், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பானுமதி (52) மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பானுமதி, உடனடியாக மீட்கப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.