News March 8, 2026

கோவையில் ஒரே நாளில் 28 எஸ்.ஐ-க்கள் அதிரடி இடமாற்றம்!

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன் பேரில் கோவை மாநகரில் ஒரே நாளில் 28 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையினை சிட்டி போலீஸ் கமிஷனர் கண்ணன் நேற்று வெளியிட்டுள்ளார்.

Similar News

News March 8, 2026

கோவை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 8, 2026

சட்டமன்ற தேர்தலில் கோவையில் களமிறங்கும் செந்தில்பாலாஜி?

image

கோவை மண்டல திமுக பொறுப்பாளராகச் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட பின், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக அபார வெற்றி பெற்றது. இதனால் வரும் தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டுமெனப் பல நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர் கோவை அல்லது கரூர் என எந்த தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் சூடுபிடித்துள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே?

News March 8, 2026

ஆலாந்துறை: வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் உக்கடம் அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று நேற்று கோவை பூலுவப்பட்டி – சித்திரைச்சாவடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்து செல்வராஜ் உயிரிழந்தார். இது குறித்து ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!