News August 24, 2025

கோவையில் ஏமாற்றப்பட்டவர்களா நீங்கள்?

image

கோவை பீளமேடு ஸ்ரீ நகரில் ‘லிங்க் 2 லிங்க்’ என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.இந்தநிலையில் இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கோவை மாநகர போலீஸ் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

Similar News

News August 24, 2025

கோவை: EXAM இல்லாமல் அரசு வேலை வேண்டுமா?

image

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விண்ணபிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். தேர்வு இல்லாமல் தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பை பெற அருமையான வாய்ப்பு உடனே SHARE பண்ணுங்க!

News August 24, 2025

பட்டா மாறுதலுக்கு படாதபாடு: முழுமையான தீர்வு எப்போது?

image

கோவை மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் மக்களுக்கு, குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பட்டா மாறுதல் செய்து வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் போடுகின்றனர். ஜமாபந்தி நடத்தியும் கூட, இப்பிரச்னை தொடர்வதால், நிரந்தர தீர்வு காண கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

News August 24, 2025

கோவையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

image

கோவை மாவட்டம்  பேரூர் அடுத்த, அட்டுக்கல் ஆதிவாசி காலனியை சேர்ந்த மருதாச்சலம் 65. ,முருகன் த/பெ துரையன் வயது சுமார் 55. இவர் நேற்று அங்குள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு  கோவிலிருந்து இறங்கும் போது வனப்பகுதியில் இருந்து, வெளியேறிய காட்டு யானை அவரை மிதித்து கொன்றது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தற்பொழுது அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!