News August 6, 2024
கோவையில் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

கோவை மாவட்டம் காளாம்பாளையத்தில் கடந்த 3ம் தேதி சாலை விபத்தில், சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீராம் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று மூளை சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து அவரது தாய் தந்தையர் ஸ்ரீ ராமின் உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனையில் இன்று தானமாக வழங்கினர். உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் உடல் நாளை காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
Similar News
News February 6, 2026
கோவையில் விபத்து.. பரிதாப பலி!

கோவை எட்டிமடை – மதுக்கரை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை ஜி ஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.
News February 6, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் (05.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 6, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் (05.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


