News August 31, 2024
கோவையில் ஆன்லைன் மோசடி: ரூ.73 கோடி போச்சு

கோவையை சேர்ந்த பலரிடம் ஆன்லைன் மோசடி கும்பல் பல கோடி ரூபாயை பறித்திருப்பது தெரியவந்துள்ளது. கோவையில் கடந்த ஜன. முதல் ஆக. 26ம் தேதி வரை சுமார், ரூ.73 கோடி ஆன்லைன் மோசடி நடந்துள்ளது. மொத்தம், 5319 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 217 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, 31 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆறு குற்றவாளிகள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
Similar News
News August 18, 2025
தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை

கோவையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேருவதற்கான நேரடி சேர்க்கையானது, 2025ஆம் ஆண்டிற்கான ஐ.டி.ஐ முதல் கட்ட கலந்தாய்வு சேர்க்கை முடிவடைந்த நிலையில், நேரடி சேர்க்கை 31ம் தேதி வரை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு 8825434331, 9123524155, 7373278939 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
கோவை: டிகிரி போதும் SBI வங்கியில் வேலை!

கோவை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News August 18, 2025
கோவை ஏர்போர்டில் கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் இன்று ஏர் அரேபியா விமானத்தில் ஷார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரூ.37.09 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள், 10 ட்ரோன்கள், 36 மைக்ரோபோன்களை பறிமுதல் செய்து அப்துல் ரஹீம், சையது சிராஜுதீன், ஜெய்னுலாபுதீன், முகமது சித்திக், முகமது அப்சல் உள்ளிட்ட ஐவரை கைது செய்து அவர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர்.