News October 28, 2024
கோவையில் அலைமோதிய கூட்டம்

தீபாவளி பண்டிகை வரும், 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, வடமாநிலத் தொழிலாளர்கள் பலரும், தங்களது சொந்த ஊர் செல்ல, நேற்று கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு அதிகளவில் வந்தனர். மதியம், 12:30 மணிக்கு வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில், முண்டியடித்துக் கொண்டு உடமைகளுடன் ஏறினர். இதனால் கோவை ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து வரும் நாட்களிலும் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 3, 2026
BREAKING: ஆனைமலை அருகே கத்திகுத்து

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா இன்று நடைபெற்று வருகிறது. குண்டம் இறங்கும் இடத்தின் அருகே இளநீர் வியாபாரம் செய்யும் இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக ராஜன் என்பவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 3, 2026
கோவையில் அண்ணாமலை பேட்டி

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தனது தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை கவனிப்பதே முதல் கடமை என தெரிவித்தார். இதனால் 6 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்துவிட்டதாகவும், தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதில்லை என்றும் அறிவித்தார்.
News February 3, 2026
BREAKING: காரமடையில் யானை தாக்கி ஒருவர் பலி

காரமடை அடுத்துள்ள பில்லூர் அணையை சுற்றிலும் ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் நள்ளிரவு பரளிக்காடு கிராமத்தில் ஒற்றை காட்டு யானை உலா வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் யானையை விரட்ட முற்பட்டுள்ளனர். அப்போது, ஆக்ரோஷமான யானை தாக்கியதில் சிவக்குமார்(45) என்ற பழங்குடியின இளைஞர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


