News November 15, 2024
கோவைக்கு வருகின்றது புதிய தீயணைப்பு நிலையம்

தமிழக அரசு தமிழத்தில் கோவை உட்பட 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசாணையை இன்று வெளியிட்டது. அதிலு கோவை மாவட்டத்திற்க்கு உட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் உருவாக உள்ளது. இதில் ஒரு தீயணைப்பு அலுவலர் உள்பட 17 பணியிடங்களை உருவாக்கவும், தளவாடப் பொருட்கள் வாங்கவும் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 2, 2026
காரமடை அரங்கநாத சாமி கோயில் பற்றி சிறப்பு

காரமடை அருகே பசு தனியாக சென்று வருவதை கால்நடைகளை மேய்க்க கொண்டு சென்ற ஒருவர் கண்டார். அவர் பசுவை பின் தொடர்ந்து சென்ற போது காரைப்புதரில் பால் சொரிவதைப் பார்த்த அவர் கோபத்தில் புதரை வெட்ட இரத்தம் சொட்டியது. பின் சந்தன காப்பிட்டு பார்த்தபோது பெருமாள் சுயம்புவடிவில் காணப்பட்டதாக கூறுப்படுகிறது. அன்று முதல் பெருமாளுக்கு கோயில் எழுப்பி வழிபாடு நடத்தப்படுகிறது. இன்றும் வெட்டுக்காயம் காணப்படுகிறது.
News March 2, 2026
FLASH: கோயம்புத்தூருக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை உப்பிலிபாளையம் மற்றும் சித்ரா பகுதியில் உள்ள பழைய, புதிய பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு இன்று மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் (ம) காவல்துறையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மிரட்டல் விடுத்த நபரைத் தேடி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
News March 2, 2026
கோவை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

கோவை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <


