News November 11, 2024
கோவில் உண்டியலை உடைத்து சென்றவர் கைது

கடையநல்லூர் கள்ளம்புலி கிராமத்தில் இன்று அதிகாலை அங்குள்ள பூ மாரியம்மன் கோவில் உண்டியலை மர்மநபர் ஒருவர் உடைத்து ஆட்டோவில் தூக்கிச் சென்றார். இதையடுத்து சிசிடிவி கேமரா பதிவை வைத்து சேர்ந்தமரம் காவல்துறை உதவி ஆய்வாளர் தீபன் குமார் தலைமையிலான போலீசார், உண்டியலை திருடிச் சென்ற கரடிகுளம் பகுதியைச் சார்ந்த கருப்பையா என்பவர் மகன் சண்முகம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
தென்காசி மாவட்டத்தில் 2,274 வீடுகள் ஒதுக்கீடு

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25, 2025-26 நிதி ஆண்டுகளில் ஆலங்குளம் 739, கடையம் 192, கடையநல்லூர் 161, கீழப்பாவூர் 209, குருவிகுளம் 216, மேலநீலிதநல்லூர் 209, சங்கரன்கோவில் 170, வாசுதேவநல்லூர் 147, தென்காசி ஒன்றியத்தில் 121, செங்கோட்டை 110 வீடுகள் என மொத்தம் ரூ.70.49 கோடியில் 2,274 வீடுகள் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
News December 11, 2025
தென்காசியில் EB கட்டணம் அதிகமா வருதா?

தென்காசி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <
News December 11, 2025
SIR பணி.. தென்காசிக்கு சிறப்பு அதிகாரி நியமனம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) 2026 தொடர்பாக, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான SIR பார்வையாளராக மத்திய சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகத்தின் இணைச்செயலர் விஜய் ரெஹ்ராவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.


