News April 5, 2025
கோவில் அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு

சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் நேற்று (ஏப்ரல்-04) போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது தவ முனிஸ்வரர் கோயில் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தங்கேஸ்வரன் (29), தங்கப்பாண்டி (30) ஆகிய இருவரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்து அங்கிருந்த சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 7, 2026
விருதுநகர்: அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

விருதுநகர் மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 7, 2026
விருதுநகர்: பள்ளிக்குள் புகுந்து ரூ.76 ஆயிரம் திருட்டு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், சிவகாசி ரோட்டில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பின்புறம் சென்ற திருடர்கள், ஒரு ஜன்னலின் கம்பிகளை வளைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பள்ளி அலுவலக அறைக்குள் புகுந்து, அங்கு வைத்து இருந்த ரூ.76 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து பள்ளியின் முதல்வர் சிவகுமார் அளித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்ப திவு செய்தனர்.
News February 7, 2026
சிவகாசி:ரூ.38 லட்சம் மோசடி; மாயமான பைனான்சியர்

சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்தவர் அருணாச்சல மூர்த்தி(51). டிவி மெக்கானிக் கடை நடத்தி வரும் இவரது நண்பர் தங்கவேல், தனக்கு தெரிந்த பைனான்ஸ் கம்பெனியில் குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி, லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அருணாச்சல மூர்த்தி ரூ.38 லட்சம் தங்கவேலுவிடம் கொடுத்தார். ஆனால் பணத்திற்கு எந்த வட்டியும் தராமல் அசலும் தராமல் தங்கவேல் மாயமானார். போலீசார் விசாரணை.


