News September 18, 2025

கோவில்பட்டி வழியாக சென்னைக்கு முழு ஏசி ரயில்

image

கோவில்பட்டி வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டை வரை முழுமையாக குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய புதன்கிழமைகளில் மாலை 3.10 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில் செப்டம்பர் 25 அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

Similar News

News March 3, 2026

குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டு பேர் கைது

image

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சுந்தரபாண்டி (21) மற்றும் தருவைகுளம் பகுதியில் நடந்த கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய கட்ட முருகன் (31) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை தடுப்பு காவல் சிறையில் அடைத்தனர்.

News March 2, 2026

BREAKING சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டு விசாரணைக்காக காவல் துறையால் அழைத்துச் சென்ற போது காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 5 ஆண்டுக்கு மேலாக நடக்கு இந்தவழக்கில் மார்ச்.23 அன்று நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்க உள்ளார்.

News March 2, 2026

தூத்துக்குடி: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

image

தூத்துக்குடி மக்களே, இங்கு <>க்ளிக் செய்து<<>> தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > தேடுதல் சென்று பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க.. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

error: Content is protected !!