News January 28, 2026
கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை உயர்வு!

நிலக்கடலை விலை உயர்வைத் தொடர்ந்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கம் மிட்டாய் விலையை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுவரை கிலோ ரூ.200 முதல் ரூ.260 வரை விற்பனையான நிலையில், இப்போது ரூ.260-க்கு விற்கப்படுகிறது. இன்று முதல் புதிய விலை அமலுக்கு வந்தது. விலை உயர்வால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்க
Similar News
News February 3, 2026
தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு ரோந்து காவல் அதிகாரியாக குற்ற அவனை காப்பக டி.எஸ்.பி ராமச்சந்திரன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் உள்ள அதிகாரிகள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அவசர தேவைக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்படுகிறது.
News February 3, 2026
தூத்துக்குடி: இந்த புகார்களுக்கு இனி Whatsapp மூலம் தீர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News February 3, 2026
தூத்துக்குடி: டூவீலர் விபத்தில் இளைஞர் பலி

புதுக்கோட்டை அருகேயுள்ள அல்லிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தடிகாரன் (20). இவர் மரம் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றினார். இன்று காலை புதுக்கோட்டையில் இருந்து அல்லிகுளத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மேலக்கூட்டுடன் காடு, அருகே சென்றபோது நிலை தடுமாறி மரத்தின் மீது பைக் மோதியதி விபத்தில் சிக்கினார். இதில் தடிகாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை.


