News January 29, 2026
கோவில்பட்டி: ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரை சேர்ந்த கிருஷ்ணசாமி (70) என்பவர் வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது ஆடுகள் திருடப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஆடுகளை திருடியதாக அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (42) மற்றும் மகேஷ் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News February 3, 2026
தூத்துக்குடி: வாலிபரை எரித்துக் கொன்ற டிரைவருக்கு ஆயுள்

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த மரியசுரேஷ்(35) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜெபராஜ்(62) 2017-ம் ஆண்டு பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் ஜெபராஜிக்கு ஆயுள் தண்டணை விதித்து நேற்று நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.
News February 3, 2026
தூத்துக்குடி: வாலிபரை எரித்துக் கொன்ற டிரைவருக்கு ஆயுள்

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த மரியசுரேஷ்(35) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜெபராஜ்(62) 2017-ம் ஆண்டு பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் ஜெபராஜிக்கு ஆயுள் தண்டணை விதித்து நேற்று நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.
News February 3, 2026
தூத்துக்குடி ESI மருத்துவமனை திறப்பு: மக்களவையில் உறுதி

தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 98% முடிந்தும், பணியாளர்கள் இல்லாததால் இன்னும் திறக்கப்படாதது குறித்து மக்களவையில் இன்று (பிப்.02) எம்பி கனிமொழி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வரும் மார்ச் இறுதிக்குள் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என உறுதியளித்தார்.


