News April 24, 2025

கோவில்பட்டியில் 200 பண்ணை குட்டைகள் திட்டம்

image

கோவில்பட்டி வேளாண் உதவி இயக்குனர் மணிகண்டன் நேற்று விடுத்துள்ள செய்தியில், விவசாய நிலங்களில் பண்ணைகள் அமைக்க அரசு ரூ.1 லட்சம் மானியம் வழங்குகிறது. அந்த வகையில் கோவில்பட்டி வட்டார பகுதிகளில் 200 பண்ணை குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் உதவி வேளாண் அலுவலர் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News April 24, 2025

திருச்செந்தூர் சித்திரை வசந்த திருவிழா அறிவிப்பு

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை வசந்த திருவிழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா மே.3 அன்று தொடங்கி மே.12 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் அருள்பாளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

News April 24, 2025

போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்செல்வம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அருள்செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.15,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

News April 23, 2025

தூத்துக்குடி:ஆத்தூர் வெற்றிலையின் ருசியின் ரகசியம்

image

ஆத்தூர் வெற்றிலைக்கு 2023-ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வெற்றிலை காரத்தன்மை கொண்ட ருசியுடன் காணப்படுகிறது. ஆத்தூர் வெற்றிலை ருசியின் ரகசியம் இப்பகுதியில் பாய்ந்து ஓடும் தாமிரபரணி ஆற்றின் நீர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. செரிமான சக்தியை ஊக்குவிக்கும் ஆத்தூர் வெற்றிலை இந்தியா முழுவதும் ஏற்றுமதி ஆகிறது. *SHAREIT*

error: Content is protected !!