News March 31, 2025
கோவில்களில் நகைகள் திருடியவர் கைது

கயத்தாறு அருகே கோனார்கோட்டை அம்மன் கோவிலில் கடந்த மாதம் நள்ளிரவில் அம்மன் கழுத்தில் இருந்த 16 கிராம் பொட்டுத்தாலி திருடப்பட்டது. அடுத்த சில நாட்களில் திருமங்களக்குறிச்சி கிராமத்தில் காளியம்மன், மாரியம்மன், துர்கை கோவில்களில் 1 பவுன் மதிப்புள்ள 8 பொட்டுதாலிகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் நெல்லையை சேர்ந்த இசக்கிபாண்டியை போலீசார் கைது செய்து 21 கிராம் பொட்டுதாலிகளை மீட்டனர்.
Similar News
News February 4, 2026
தூத்துக்குடியில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் நெல்லை பேட்டையை சேர்ந்த கூடலிங்கம் (27), சுத்தமல்லியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைதாகி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பரிந்துரை செய்ததன் பெயரில் கலெக்டர் இளம்பகவத் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
News February 3, 2026
தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு ரோந்து காவல் அதிகாரியாக குற்ற அவனை காப்பக டி.எஸ்.பி ராமச்சந்திரன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் உள்ள அதிகாரிகள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அவசர தேவைக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்படுகிறது.
News February 3, 2026
தூத்துக்குடி: இந்த புகார்களுக்கு இனி Whatsapp மூலம் தீர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!


