News August 6, 2024
கோழி வளர்ப்பு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாட்டின கோழி வளர்ப்பு தொழிலை பெண்கள் மேற்கொள்ள 24-25ம் ஆண்டில் 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாமக்கலில், ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 15 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1,500 பயனாளிகளுக்கு செயல்படுத்த நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20க்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகலாம்.
Similar News
News January 31, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்க்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 82 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 355 முகவர்கள் மூலம் விநியோகிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1-ஆம் தேதி முதல், முகவர்கள் தங்களுக்குத் தேவையான பால் மற்றும் உபபொருட்களைப் புதிய ஆவின் செயலி (Aavin App) மூலமாகவே முன்பதிவு செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
News January 31, 2026
நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

நாமக்கல் மாவட்டத்தில், வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி (01.02.2026) அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிம வளாகங்கள் அன்றைய தினம் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 31, 2026
நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

நாமக்கல் மாவட்டத்தில், வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி (01.02.2026) அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிம வளாகங்கள் அன்றைய தினம் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


