News April 1, 2024

கோழி குஞ்சு உற்பத்தி நிறுவனம் மூடல்

image

கொரோனாவிற்கு பின் கோழிக்குஞ்சுகள் உற்பத்தி 1½ ஆண்டாக நிறுத்தப்பட்டதால் ஊழியர்களுக்கு வேலை தர வேண்டும் என்ற கட்டாயத்தில் கார்டன் பராமரிப்பு, எந்திரங்களை சுத்தம் செய்வது முதலிய வேலைகள் வழங்கப்பட்டன. நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் ரூ. 3.50 லட்சம் செட்டில்மென்ட் தொகையை ஊழியர்களின் வங்கி கணக்கில் நிர்வாகம் செலுத்தி உள்ளது. மீண்டும் வேலை வழங்க வேண்டும் என ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News August 15, 2025

EXCLUSIVE: 7ஆம் ஆண்டில் திருப்பத்தூர்

image

தமிழ்நாட்டின் 35வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் அறிவிக்கப்பட்ட தினம் இன்று. ஆம், ஆகஸ்ட் 15, 2019 அன்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூரை ஒருங்கிணைந்த வேலூரில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக அறிவித்தார். 6 ஆண்டுகள் முடிந்து 7ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் திருப்பத்தூரில் படித்தவர்கள் பணிபுரிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது கனவாகவே உள்ளது. உங்க கருத்து என்ன? SHARE IT

News August 14, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

மூவர்ணக் கொடி அலங்காரத்தில் ஆட்சியர் அலுவலகம்

image

இந்திய நாடு முழுவதும் நாளை (15.08.2025) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து தளங்களும் மின்விளக்கு அலங்கரிக்கப்பட்டு ஆரஞ்சு, வெள்ளை, பச்சை உள்ளிட்ட மின்விளக்குகள் இரவு நேரத்தில் ஜொலித்து வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

error: Content is protected !!