News December 19, 2025

கோலியின் சாதனையை முறியடிப்பாரா அபிஷேக்?

image

IND, SA இடையே இன்று 5-வது டி-20 போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
இதில் அபிஷேக் சர்மா, கோலியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. ஒரு ஆண்டிற்குள் T20-ல் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை கோலியின் வசம் உள்ளது. அவர் 2016-ல் 1,614 ரன்கள் (IND, RCB) அடித்துள்ளார். நடப்பாண்டில் 1,568 ரன்கள் எடுத்துள்ள அபிஷேக் (IND, PUN, SRH) கூடுதலாக 47 ரன்கள் எடுத்தால் அச்சாதனை தகர்க்கப்படும்.

Similar News

News December 26, 2025

மீண்டும் மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

தமிழகத்தில் சில நாள்களுக்கு பிறகு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. காலையில் தருமபுரி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இந்நிலையில், இன்று முதல் ஜன.1-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மீண்டும் குடைக்கு வேலை வந்திருக்கிறது. உங்க பகுதியில் மழை பெய்யுதா?

News December 26, 2025

பெண் குழந்தைகளின் படிப்புக்கு காசு தரும் அரசு

image

கிராமப்புறங்களில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் MBC/DNC சமூகத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு TN அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது. அதன்படி, 3 – 5-ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ₹500-ம், 6-வது பயிலும்போது ₹1000-ம் வழங்கப்படுகிறது. இதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. திட்டத்திற்கு விண்ணப்பிக்க பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகவும். SHARE.

News December 26, 2025

முதல் சம்பளத்தில் விஜய் என்ன செய்தார் தெரியுமா?

image

விஜய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த போது அவருக்கு 18 வயதுதான். அப்போதே மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு மேலோங்கி இருந்ததாக விஜய்யின் நண்பரும் நடிகருமான தாமு சொல்கிறார். தன்னுடைய முதல் படத்திற்கு வாங்கிய சம்பளத்தில் ஏழை எளியோருக்கு புடவை, உணவு பொருள்களை விஜய் வாங்கிக்கொடுத்தாராம். இந்த குணம் தான் அவருக்கு தற்போது வரை நீடிப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!