News April 1, 2025
கோர விபத்தில் 3 பேர் பலி

செங்கல்பட்டு அருகே நடந்த கோர விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்ட லாரி ஒன்று சிங்கப்பெருமாள் கோவில் அருகே திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. அப்போது, மற்றொரு டிப்பர் லாரி கார் மீது மோதியது. இதில், கார் நசுங்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூவர் பலத்த காயம் அடைந்தனர்.
Similar News
News April 2, 2025
சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிப்போரது எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில் (2025) மார்ச் மாதத்தில் 92 லட்சத்து 10 ஆயிரத்து 69 பேர் பயணம் செய்துள்ளனர். மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக, மார்ச் 7ஆம் தேதி அன்று 3 லட்சத்து 45 ஆயிரத்து 862 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கியூ.ஆர். குறியீடு டிக்கெட் மற்றும் பயண அட்டை டிக்கெட்டிற்கு 20% தள்ளுபடி செய்கிறது.
News April 2, 2025
பிரபல பிலால் ஓட்டலில் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி

சென்னை மவுண்ட் ரோடில் உள்ள பிரபல பிலால் தனியார் ஓட்டலில் சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் உட்பட 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வாந்தி மயக்கத்திற்கு உள்ளன 8 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாணியால் இவ்வாறு நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News April 2, 2025
CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி. <