News December 12, 2025

கோர விபத்தில் 22 பேர் பலி.. PM மோடி இரங்கல்

image

அருணாசல பிரதேசத்தில் இந்திய – சீன எல்லையில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் டிரக் கவிழ்ந்த <<18533109>>விபத்தில்<<>> 22 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ₹2 லட்சம் & காயமடைந்தோருக்கு ₹50 ஆயிரமும், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார்.

Similar News

News April 4, 2026

திருமணமான இரண்டே மாதத்தில் பெண்ணுக்கு சோகம்

image

வரதட்சணை கொடுமையால் திருமணமான இரண்டே மாதத்தில் இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட துயரம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. பிஹாரை சேர்ந்த இஷிதா(26), SM-ல் பழகி நீரஜை திருமணம் செய்து கொண்டார். பிறகு வேலைக்காக தம்பதியர் ஹைதராபாத்துக்கு சென்றுள்ளனர். அப்போது சுயரூபத்தை காட்டிய நீரஜ், வரதட்சணை கேட்டு இஷிதாவை கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால், வீட்டில் தூக்கிட்டு இஷிதா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகம். SO SAD

News April 4, 2026

திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்

image

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். அந்த வகையில், கோவை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினரும், திமுக மூத்த நிர்வாகியுமான TR சண்முகசுந்தரம், குடும்ப சூழல் & பணி சுமை காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று காலை EX அமைச்சரும், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான Dr.விஜய் திமுகவில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

News April 4, 2026

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது ஏன்? TTV

image

தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாததற்கு எந்த அழுத்தமும் காரணமில்லை என TTV தினகரன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நாள்களுக்கு முன்னரே தேர்தலில் போட்டியிட போவதில்லை, அனைத்து தொகுதிகளுக்கும் பிரசாரத்துக்கு செல்ல போகிறேன் என தன்னிடம் அண்ணாமலை கூறியதாக தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பது அவரது தனிப்பட்ட முடிவு எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!