News February 16, 2025
கோரிக்கை விடுத்த கன்னியாகுமரி எம்பி

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் இன்று (பிப் 16) வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
Similar News
News November 7, 2025
குமரி: புகழ்பெற்ற சிவாலயத்தில் கொள்ளை முயற்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற 12 சிவாலயங்களில் ஒன்றான திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து அங்குள்ள உண்டியலை உடைத்துள்ளனர். ஆனால் உண்டியல் பணம் எதுவும் திருட்டுப் போகவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 7, 2025
குமரி அருகே விபத்தில் ஒருவர் பலி

அனந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த அஜிஸ்(21) தனியார் உணவகத்தில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் நித்திரவிளை – விரிவுரை சாலையில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதியதில் அஜிஸ் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்த நிலையில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 7, 2025
குமரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

குமரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!


