News January 3, 2026

கோயிலில் மதவெறியை வளர்க்கக் கூடாது: சேகர்பாபு

image

கன்னியாகுமரி கோயில் நிகழ்ச்சியில் அமைச்சர் <<18742042>>சேகர்பாபு<<>> பக்தர்களை திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், அமைதி காக்கும் இடத்தில் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும், மதவெறியை வளர்க்கக் கூடாது என சேகர்பாபு தெரிவித்துள்ளார். பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை கோயிலுக்கு வெளியே சொல்லட்டும் எனவும், ஆன்மிகமும், பக்தியும் அறத்தைதான் உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 14, 2026

T20 WC: ஓமனை துவம்சம் செய்த அயர்லாந்து

image

கொழும்புவில் நடந்த இன்றைய T20WC ஆட்டத்தில் அயர்லாந்திடம் ஓமன் அணி படுதோல்வி அடைந்தது. அயர்லாந்து நிர்ணயித்த 236 ரன் இலக்கை விரட்டிய ஓமன் 139 ரன்களில் ஆட்டமிழந்தது. கலீம் (50), மிர்ஸா (46) இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்த நிலையில், அடுத்து வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அயர்லாந்து தரப்பில் கேப்டன் டக்கர் 51 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

News February 14, 2026

இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்.. ஆச்சரியம்

image

இறந்தவர் மீண்டும் திரும்பி வந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் அசாமில் நடந்துள்ளது. மேகாலயா சுரங்க விபத்தில் தொழிலாளி ஷியாம் பாபு உயிரிழந்ததாகக் கருதி, ஒரு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் உடலை தகனம் செய்தனர். இந்நிலையில், 3 நாள்களுக்கு பிறகு ஷியாம் பாபு உயிருடன் வீடு திரும்பி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போ, தகனம் செய்த உடல் யாருடையது?

News February 14, 2026

ஆதாரின் வடிவம் மாறப் போகிறது

image

ஆதார் கார்டு விரைவில் புதிய வடிவத்துக்கு மாறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர், முகவரி, ஆதார் எண் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் கார்டில் இருந்து நீக்கப்பட்டு, போட்டோ & QR கோட் மட்டுமே இடம்பெறும். இதனால் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றவர்களுக்கு கிடைப்பது தடுக்கப்படும். QR கோடை ஸ்கேன் செய்தால் மட்டுமே அந்த விவரங்கள் தெரியும். இதனால், இதை தவறாக பயன்படுத்துவதை தடுக்க முடியும் என UIDAI கருதுகிறது.

error: Content is protected !!