News April 24, 2024

கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலை அதிகரிப்பு

image

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று(ஏப்.21) முதல் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.450க்கும், முல்லை, ஜாதிமல்லி பூக்கள் ரூ.350க்கும், சாமந்தி, அரளிப்பூ ஆகியவை ரூ.250க்கும் விற்கப்படுகின்றன. மேலும் சம்பங்கி ரூ.400க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.140க்கும் என விலை உயர்ந்து விற்பனையானது.

Similar News

News February 13, 2026

சென்னை: உங்களுக்கு இன்று ரூ.5,000 வரலையா..? CLICK

image

சென்னை மக்களே..அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று(பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே <>கிளிக் <<>>செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE பண்ணுங்க.

News February 13, 2026

சென்னை: உள்ளாடையுடன் தூக்கில் தொங்கிய பெண் காவலர்!

image

சென்னை எழும்பூரில் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இசசம்பவம் தொடர்பாக பெண் காவலரை அவரது கணவரே அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டதாக தாய் கண்ணீர் மல்க எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், வெறும் உள்ளாடையுடன் யாராவது தற்கொலை செய்து கொள்வார்களா என காவலரின் தாய் கேள்வி எழுப்பி உள்ளார்.

News February 13, 2026

சென்னை: 10 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த நபர் கைது!

image

2013ம் ஆண்டு பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் கார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ், பிணையில் வெளியேறிய பின்னர் 2016 முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் 2025 ஏப்ரல் 9 அன்று நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. சுமார் 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சதீஷை, பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, வேளச்சேரி நேரு நகர் பகுதியில் நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!