News October 17, 2025

கோபி அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (34). டிரைவராக வேலை பார்த்து வந்த இவருக்குக் குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் பாக்யராஜுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.இந்தநிலையில் பாக்யராஜ், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை!

Similar News

News October 17, 2025

ஈரோடு மாவட்டத்தில் மின் தடையா? உடனே CALL

image

ஈரோடு,மாவட்டத்தில் பருவமழை துவங்குவதால், மின் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்’ என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி வேண்டுகோள்விடுத்துள்ளார். மின் கம்பி அறுந்தால் அல்லது மின்தடை, மின் கட்டணத்தில் ஏற்படும் குழப்பங்கள் அல்லது மின் சம்பந்தமாக வேறு ஏதேனும் உதவி தேவைபட்டால் தொடர்புக்கு – 94987 94987 அல்லது வாட்ஸ் ஆப் எண் -94458 51912 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்.SHERE பண்ணுங்க

News October 17, 2025

பெருந்துறை அருகே வாய்க்காலில் மிதந்த ஆண் பிணம்!

image

பெருந்துறை புங்கம்பாடியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக பெருந்துறை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அங்கு சென்று தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் வாய்க்காலில் மிதந்த சடலத்தை மீட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? தற்கொலை செய்தாரா? என்று விசாரிக்கின்றனர்.

News October 17, 2025

ஈரோடு:அலைய வேண்டாம் ‘வாட்ஸ்அப் ஆதார் சேவை’

image

மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!